×

திருவெண்காடு புதன் கோயிலில் தீர்த்தவாரி

சீர்காழி, ஆக. 27: சீர்காழி அருகே நவக்கிரகங்களில் ஒன்றான திருவெண்காடு புதன் கோயிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அக்னி, சூரியன், சந்திரன் தீர்த்த முக்குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பாள் அகோரமூர்த்தி புதன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அப்போது திருஞான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Tirthavari ,Tiruvengadu Buddha Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத...